Thursday, October 19, 2017

யாத்திரைப் பாடல்கள்





விண்ணின்று பூமி மண்-வந்த ஸ்வாமி
பொன்னே-பொன் மணியே-நீ தானடா
கண்ணே-கண் மணியே-கண்  தூங்கடா
   (MUSIC)
பூவொன்று தானே நீ-கொண்ட நெஞ்சு
தீதொன்று உன்-அன்பில் தோன்றுமா
யாதொன்று வேறிங்கு வேண்டுமா
(MUSIC)
யது-வம்ச சோமா துஷ்-கம்ச பீமா
 கமனீய-தாமா சௌந்தர்ய-ஷ்யாமா
நந்தா ப்ரிய லால்  கோவிந்த கோபால்
வா-வா க்ருபாளா முரளீதரா-லால்
மனம்கவரும்... மாணிக்கமே...!
மனம்கவரும் மாணிக்கமே
நடந்து-வரும்.... நாட்டியமே...!
நடந்து-வரும் நாட்டியமே
விண்ணின்று விளையாட மண்வந்த சேயல்லவோ
ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ..ஜோஜோ
(Short Music)
விண்ணின்று பூமி மண்-வந்த ஸ்வாமி
பொன்னே-பொன் மணியே-நீ தானடா
கண்ணே -கண் மணியே-கண்  தூங்கடா
(MUSIC)
பாம்பென்ற பாயில் துயில்கொண்ட  புவனா
தூங்காமல் தூங்கும் ஹே-சேஷ சயனா
அழகாக ஆலில் சிரிக்கின்ற கண்ணா
நீங்காமல் நெஞ்சில் நிறைகின்ற மன்னா
நீ-எழிலில்... மன்மதனா...!
நீ-எழிலில் மன்மதனா
அருள்வழங்கும்... என்சதனா..!
அருள்வழங்கும் என்சதனா
மண்வந்த சேயல்ல நீ-எங்கள்  தாயல்லவோ
ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ ஜோஜோ
(Short Music)
விண்ணின்று பூமி மண்-வந்த ஸ்வாமி
பொன்னே-பொன் மணியே-நீ தானடா
கண்ணே -கண் மணியே-கண்  தூங்கடா
  பூவொன்று தானே நீ கொண்ட நெஞ்சு
தீதொன்று உன் அன்பில் தோன்றுமா
யாதொன்று வேறிங்கு வேண்டுமா

____________________________________

************


விண்ணகர்-தோற்..க-மண்மீ..தி..லோர்-நகர்
கண்ணனின் த்வா..ரகையே
புவிமீதிலே
(3)
விண்ணவர் வாழ்கின்ற..தாம்-அமராவதி (2)
இதற்கிணையாய்-அல்ல அதனினும் மேலடி (2)
தேவ-லோகமோ எனும்-த்வார..கா..புரி (2)
போலெது-கூறடி கண்டிடுவோம் வாடி (2)
விண்ணகர்-தோற்க மண்மீதி..லோர்-நகர்
கண்ணனின் த்வா..ரகையே
(MUSIC)
விதவித-மாளிகை மாடமும்-கூடமும் (2)
வேடிக்கை பார்க்க-யுகம் பலப்பல வாகிடும் (2)
விதவித-மாளிகை மாடமும்-கூடமும்
வேடிக்கை பார்க்க-யுகம் பலப்பல வாகிடும்
உலகம் முழுதும் இல்லை அதற்கிணை வேறெதும் (2)
 விரைவினில்-காண்போம் நாமும்-வா..யேன்-தோழி
விரைவினில்-காண்போம் நாமும்-வா..யேன் அதை (3)
விண்ணகர் தோற்க மண்மீதி..லோர் நகர்
கண்ணனின் த்வா..ரகையே 
(MUSIC)
முயன்று முயன்றவனை உத்தம-யோகியெல்லாம் (3)
உயரிய பெரியோரெலாம் கண்டிட யோகம் கொண்டார் (2)
முயன்று முயன்றவனை உத்தம-யோகியெல்லாம்
உயரிய பெரியோரெலாம் வந்திங்கு யோகம் கொண்டார்
அவர்குறை போக்க-வந்தான் த்வாரகை வாசம்-கொண்டான் (2)
இத்தலம்-தானே வந்தானே நின்றான் ஹரி
இத்தலம்-தானே வந்தானே தந்தான்  கதி 
விண்ணகர்-தோற்க மண்மீதி..லோர்-நகர் கண்ணனின் த்வா..ரகையே
(MUSIC)

அன்புக்குடம் உடைந்து ..
அன்புக்குடம் உடைந்து ஆறெனப் பாய்ந்து-வந்தான் (3)
தொடர்வினை மாயம்-நீக்கி உயர்ந்த-ப..தவி-தந்தான் (2)
அன்பைத் திரட்டி-மூங்கில் ஊதலில் தேன் சொரிந்தான்
அன்பைத் திரட்டி- ஊதிக் குழலிசையாகத் தந்தான்
அன்பைத் திரட்டி- ஊதிக் காதினில் தேன் சொரிந்தான்

அதற்கிணை ஏதோ அம்மா (3)
அது-என்..றோ-இனி
அதற்கிணை ஏதோ அம்மா அது-என்..றோ-இனி
விண்ணகர் தோற்க மண்மீதி..லோர் நகர்
கண்ணனின் த்வா..ரகையே..
புவிமீதிலே
தேவரும் போற்ற சிதானந்தம் மேவிட
இதற்கிணை..யாய்ச்-சொல்ல ஜகத்தினில் ஏதடி
தேவ லோகமோ எனும்-த்வார..கா..புரி
போலெது-கூறடி கண்டிடுவோம் வாடி

விண்ணகர்-தோற்க மண்மீதி..லோர்-நகர்
கண்ணனின் த்வா..ரகையே…

 ______________________________________________________________


*******

மனம்-கவர் பாடலை நாம்-பாடி நமைத் தந்திடுவோம்-வா கண்ணனிடம்
(1+SM+1)
இருகரம்-தூக்கிச் சரண்-என்போம் அந்தக் கண்ணனோ தன்னையே தந்திடுவான்
மனம்-கவர் பாடலை நாம்-பாடி நமைத் தந்திடுவோம்-வா கண்ணனிடம்
(MUSIC)
அவன்-முகம் கண்டே-பே..ரின்ப-நிலை
கொள்ள மண்ணிலே செய்து-நின்றான் மாயங்களை
என்னிடம் வாவென்று முக்தி-நிலை தந்து நம்மை-ஆட் கொள்ளுவான் ஐயமிலை
ஓ …. ஓ ..
மனம்-கவர் பாடலை நாம்-பாடி நமைத் தந்திடுவோம் வா கண்ணனிடம்
(MUSIC)
விண்ணகர் மேலோர் பொன்னக ரே அந்த கண்ணனும் செய்தநல் த்வாரகை யே
அந்த இடம்-நாம் தேடிச் செல்வோம்
அந்த நாயகன் மேன்மையைப் பாடிச் சொல்வோம்
மனம்-கவர் பாடலை நாம்-பாடி நமைத் தந்திடுவோம் வா கண்ணனிடம்
 ______________________________________________________________

************


ஐயமில்லை என்ன-பாக்குறீங்க
கண்ணன் பையனில்லை ஆண்டவனே-தாங்க
அவன் கம்சனோடு மோதிக் கொன்னுட்டாங்க -
இது பையனால ஆகுமாங்க-ஏங்க ?
கம்சனோடு மோதிக் கொன்னுட்டாங்க -
இது பைய்யானால ஆகுமாங்க ஏங்க ?
ஐயமில்லை.. சிறு ஐயமில்லை.. துளி ஐயமில்லை..-
என்ன-பாக்குறீங்க
  கண்ணன் பையனில்லை ஆண்டவனே-தாங்க
தேவகி-பாலனாய் ராதா-லோலனாய் வந்ததால் ஒரே ஐயமா
பூமுகம்-கொண்டதால் பார்வையில்-சின்னதாய் நின்னதால் சிறு பையனா
கோகுலபாலனே அந்த-மாலே என-வ்யாஸமாமுனி கூறினாரே
ஐயமில்லை.. சிறு ஐயமில்லை.. துளி ஐயமில்லை..-
என்ன-பாக்குறீங்க
  கண்ணன் பையனில்லை ஆண்டவனே-தாங்க
காளிய-ஆட்டமும் பாம்பு-தன் ஓட்டமும் ஆகுமா ஐயா பையனால்
மாபெரும் மலையை-யார் விரலாலே தூக்கினார் கூறய்யா  பதில் கூறய்யா
நீ-தான் பைத்தியம் அறிந்திடாயோ அவன்-தான் வைத்தியம் புரிந்திடாயோ
நீ-ஓர் பைத்தியம் மாறிடாயோ அவன்-பேர் வைத்தியம் கூறிடாயோ
ஐயமில்லை.. சிறு ஐயமில்லை.. துளி ஐயமில்லை..-
என்ன-பாக்குறீங்க
  கண்ணன் பையனில்லை ஆண்டவனே-தாங்க (2)
கண்ணன் பையனில்லை கும்பிடலாம் வாங்க

ப்ருந்தாவன் விஹாரி லால்கி - ஜெய்





No comments:

Post a Comment